Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 15 MAY 1976
உதிர்வு 29 JUL 2022
அமரர் நளாயினி அருட்பாலா 1976 - 2022 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 43 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Woodbridge ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நளாயினி அருட்பாலா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி. 

திதி: 25-07-2025

இம் மண்ணில் எம்மை
 மலரவைத்த தாயே!
ஆண்டு மூன்று ஆனாலும் உமது
 எண்ணங்கள் எமது கண்ணில்...
துளியாய் வடிகின்றது!

பாசமும் பரிவும் தந்து
பார்த்துப் பார்த்து வளர்த்தது
பசுமையான நினைவுகளாய் இருக்கிறதே

உங்கள் அன்பின் ஆழம்தான்
இன்றும் எம் விழியோரங்களில்
கண்ணீர்த்துளிகளாய் கசிகின்றது

நீங்கள் எங்களை ஒருபோதும்
விட்டு விடவில்லை நீங்கள் எப்பொழுதும்
எங்களுடன் தான் இருக்கின்றீர்கள்!

மூன்று ஆண்டானாலும்
நித்தம் உங்கள் நினைவுகளோடு
நின் பாதமலர் பணிகின்றோம்...

ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்