Clicky

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
அன்னை மடியில் 17 MAR 1931
இறைவன் அடியில் 22 NOV 2024
அமரர் நாகமுத்து சேனாதிராசா
இளைப்பாறிய விமானப்படை , Prima Nursing Officer
வயது 93
அமரர் நாகமுத்து சேனாதிராசா 1931 - 2024 காரைநகர் கோவளம், Sri Lanka Sri Lanka
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

யாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கொழும்பு ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட நாகமுத்து சேனாதிராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

நாட்கள் பல சென்றாலும்
கனவெல்லாம் கண்ணீர் சொரிய
கண்கள் நீரில் மூழ்க
கண்டது எல்லாம் உம் நினைவாக
துடிக்கும் உம் உறவுகளின் புலம்பல் இது! 
எமக்கு எல்லாம் ஆதரவு தந்த
எம் தந்தையே!
ஒரு மாதம் சென்றாலும்
எம் நினைவே உருவாகி உள்ளீர்!
இனி எப்போது எமக்களிப்பீர் உம் தரிசனம்!
எமை எல்லாம் தாங்கிப் பிடித்த
வழிகாட்டியே நீர்
இப்பிறவி அல்ல எப்பிறவியிலும்
எமக்கு தந்தையாக வேண்டும்!
என இறைவனை மன்றாடுகின்றோம்! 
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 20-12-2024 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் மோதரையில் நடைபெறும். அதனைத்தொடர்ந்து 22-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டுக்கிரியை மற்றும் மதிய போசன நிகழ்வுகள் ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும் அத்தருணம் அனைவரும் பங்கெடுத்துக்கொள்ளுமாறு அன்போடு வேண்டுகிறோம்.

இங்ஙனம், ரவிச்சந்திரன்(மகன்- லண்டன்)
Tribute 7 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.