யாழ். கச்சாய் தெற்கு அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் நாகமுத்து அவர்களின் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும், உணவு தந்து உதவியவர்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 23-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலை 06:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும், வீட்டுக் கிருத்தியக் கிரியைகள் 25-03-2021 வியாழக்கிழமை அன்று பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்திலும் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து சபீண்டீகரணக் கிரியைகளிலும், ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து இடம்பெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.