அன்பிற்கு இலக்கணமாய் அவனியில் வாழ்ந்து பண்புடைமை காத்து பக்குவமாய் வழி நடந்தீர் இரக்கத்தின் இருப்பிடமாய் ஈகை பல செய்து எல்லோருக்கும் நல்லவராய் நாணயமாய் நடந்தீர் ஏனோ இறைவன் இடை நடுவில் பறித்து விட்டான்.. துன்புற்றோர் துயர் துடைத்து துணைக்கரமாய் அடைக்கலம் தந்த உம்மை ஆண்டவன் ஏனழைத்தான் பண்புள்ளோரை பல காலம் வாழவிடக் கூடாதென்றோ? என் செய்வோம் இறைவன் சித்தம் இது இனி காணமுடியாத சோகநிலையோடு இங்கிருந்தே ஏங்கியழுகிறோம். கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் மண் விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும் கண் விட்டு மறையாமல் கன காலம் இருப்பீர்கள். வார்த்தை தடுமாறுகின்றதே நேற்றுக் கண்ட உங்களை நினைத்து நெஞ்சம் உருமாறுகின்றதே!! காந்தமாய் எமையீர்த்த உங்களை காலனுனை கவர்ந்து சென்றதேனோ? காலமெல்லாம் உம் உறவு நினைத்துருக காததூரம் எமைவிட்டு சென்றதேனோ? – நாமோ!! இன்று மங்காத உன் நினைவால் மயங்கியே நிற்கின்றோம். We Miss You.
                    
        
                        
                        
                        
            
மாமாவின் ஆத்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்