

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த முருகேசு சண்முகராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அருமை ஐயா!!
எம்மைவிட்டு எங்கு சென்றீரோ!
எங்களைவிட்டு பிரிந்திடவே உங்களுக்கு
என்றும் மனம் வராதே!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஓர் ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர் எங்களை
எல்லாம் அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து வழிநடத்திய அந்த நாள்
எங்களை விட்டு நீண்ட தூரம் சென்றாலும்,
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில்
உயிர்வாழும் ஐயா என்ற சொல்லுக்கு
நீங்களே இலக்கணம்!
எத்தனை உறவுகள் எம்மை
சூழ்ந்திருந்தாலும் அத்தனை உறவுகளும்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - ?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Rest In Peace