5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு நடராசா
பொறியியலாளர், S.V.M நிருவனப்பணிப்பாளர்
வயது 66
Tribute
6
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். காரைநகர் களபூமி விளானைப் பிறப்பிடமாகவும், லண்டன், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த முருகேசு நடராசா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா!
அன்புக்கு உருவம் நீங்களப்பா!
எங்களை விட்டு நீங்கள் எங்கு தான்
சென்றீர்களோ?
ஆண்டு ஐந்து ஆகிவிட்டதப்பா
உங்கள் அன்பு முகம் பாராமல்
நாங்கள் கலங்கித் தவிக்கின்றோம்
ஆலவிருட்சம் போல் கிளைகளைப் பரப்பி
எங்களை எல்லாம் தாங்கி நின்றவரே!
இன்று நீங்கள் இல்லாமல் தனியாய் தவிக்கின்றோம்
நாம் வாழும் காலம் வரை
உங்கள் நினைவுகளும் எங்கள்
உள்ளத்தில் வற்றாத ஊற்றாகப் பொங்கிப் பெருகும்
உங்கள் வாழ்வின் சிறப்புகளை
எங்கள் மனதில் நிலை நிறுத்தி
உலகம் உங்களைப் போற்றும்படியாக
நாங்கள் மண்ணில் வாழ்வோம்
உங்கள் ஆத்ம சாந்திக்காய்
உளமுருகி இறைவனிடம் வேண்டுகிறோம்....
தகவல்:
குடும்பத்தினர்