Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அன்னை மடியில் 11 DEC 1941
இறைவன் அடியில் 15 SEP 2024
திரு மூத்ததம்பி மார்க்கண்டு (இந்திரசித்து)
முன்னாள் ஊர்காவற்றுறை பல்நோக்குக்கூட்டுறவுச்சங்க முகாமையாளர்
வயது 82
திரு மூத்ததம்பி மார்க்கண்டு 1941 - 2024 சரவணை மேற்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், ஜேர்மனி, பிரான்ஸ் Ivry-sur-Seine, Limeil-Brévannes ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மூத்ததம்பி மார்க்கண்டு அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

"திரைகடல் ஓடிய திரவியமே,
முயற்சியின் திருவுருவே,
உழைப்பின் உயர்வே,
பாசத்தின் பொருளே,
எமை ஆளாக்கிய பரம்பொருளே,
 "அப்பா" என்ற சொல்லில்
 பொங்கி வழியும் உணர்வே,
அரியதோர் தலைமுறையின்
எளிய எடுத்துக்காட்டே!
 நாம் படித்த மேதைகளும்,
சாதனை மனிதரும்
நோயின் வாயில்
 உங்கள் பரிமாணங்களில்
எங்கோ மறைந்தனர்."

உங்கள் நினைவில் தேங்கும் எங்களை
 முன்னே செலுத்தும் உங்கள் விருப்பங்கள்!

ஆச்சி, அப்புவின் அரவணைப்பில்
 நீங்கள் ஆத்மஈடேற்றம் பெற
எல்லாம் வல்ல வேம்படி சித்தி வியாயகரையும்,
 தேவபுரம் கதிர்வேலாயுதனையும்
வேண்டிநிற்கும் மனைவி, மகள், மகன்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் அனைத்துச்
சொந்தங்களும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் முப்பத்தோராம் நாள் எதிர்வரும் 15-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 16 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்