Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 16 JUL 1951
இறப்பு 11 MAY 2022
அமரர் மரியாம்பிள்ளை தேவரட்ணம் (தேவகிளி)
றெஜினா Transport (M.T.R), றெஜினா Hardware, றெஜினா Building - உரிமையாளர்
வயது 70
அமரர் மரியாம்பிள்ளை தேவரட்ணம் 1951 - 2022 குடத்தனை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். குடத்தனை பொற்பதியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை தும்பளை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை தேவரட்ணம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

தூய்மையான உள்ளத்தோர் பேறு பெற்றோர்
ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.
(மத். 5:8)

அப்பா !
நீங்கள் இறைவன் எமக்கு தந்த ஒரு கொடை
உங்கள்
ஆழமான விசுவாசம், கடின உழைப்பு
யாரையும் புண்படுத்தாத நல்ல மனம்
உதவி செய்யும் தாராள உள்ளம்
வளமையிலும் எளிமையான வாழ்வு
எல்லோரையும் மதிக்கும் உயர் பண்பு
மன்னித்து மறக்கும் மனம்
கனிவான பேச்சு தூய்மையான உள்ளம்
இவைகள் உங்கள் வாழ்வின்
உயரிய மனிதப் பண்புகள்
இவ் உயரிய பண்புகளில் நாமும் வழிநடக்க
வழி நடத்துங்கள் விண்ணிலிருந்து.

எமது பாசமிகு குடும்பத் தலைவனை இழந்து நாம் துயருற்ற வேளை நேரில் வந்து உடனிருந்த உறவுகள், நண்பர்கள், தொலைபேசி, முகநூல், மின்னஞ்சல், குறுந்தகவல், RIP Book வழியாக உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் தங்கள் அனுதாபங்களை தெரிவித்த உறவுகள், நண்பர்கள், இன்னும் துண்டுப்பிரசுரங்கள், பதாதைகள், மலர் வளையம், மலர் மாலை ஆகியவை ஊடாக தங்கள் அனுதாபங்களை தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்கள், எமது அப்பாவின் இறுதி யாத்திரைச் சடங்கில் கலந்து அவருக்கு மரியாதை செலுத்தி அவருக்காக செபித்த அனைத்து அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பாடசாலை சமூகத்தினர், உறவுகள், நண்பர்கள் மேலும் இன்றுவரை எம்முடனிருந்து எமக்கு வேண்டிய சகல உதவிகளையும் செய்யும் அன்பு உள்ளங்கள் அனைவரையும் நன்றியோடு நினைவு கூருகின்றோம்.  

அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக 10-06-2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு பொற்பதி புனித இராயப்பர் ஆலயத்தில் இரங்கற் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். திருப்பலியில் பங்கு கொண்டு அதனைத்தொடர்ந்து எமது இல்லத்தில் நடைபெறும் மதிய விருந்திலும் கலந்துகொள்ளுமாறு அழைத்து நிற்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.