

மன்னார் முருங்கனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மரியான் செபஸ்ரியான் செபமாலை அவர்கள் 08-01-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மரியான் செபஸ்ரியான்(நாட்டுக் கூத்து, அண்ணாவியார்) செபமாலை தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சவிரிமுத்து பிரான்சிஸ்கா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரோஸ்மேரி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஆனந்தராசா(பிரான்ஸ்), இன்பராசா(பிரான்ஸ்), அருட்தந்தை அன்பராசா(OMI அன்னை இல்லம், கிளிநொச்சி), திருமகள்(ஆசிரியர்), மலர்விழி(ஆசிரியர்), கயல்விழி(இலங்கை வங்கி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சசிகலா(பிரான்ஸ்), கயல்விழி(பிரான்ஸ்), சந்தியோகு(கோட்டக்கல்விப் பணிப்பாளர்), ஒஸ்மன்(சுகாதார வைத்திய அதிகாரி), நிக்ஷன்(முகாமைத்துவ சேவை உதவியாளர்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
செலின், அடலின், லிசா, மக்டெல், சாகித்தியன், பூர்விகா, கெளசிகன், காவியா, கவிநயன், கவிப்பிரியன், ஆதித்தியன், ஆதனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சீமான்(கலா பூசணம்), காலஞ்சென்றவர்களான அன்னம்மா, திரேசம்மா, சந்தியோகு(இரத்தினம்) மற்றும் சைனம்மா, மாசிலாமணி(கலாபூசணம்), காலஞ்சென்ற யேசுதாசன்(தாளவாத்திய கலைஞர்) மற்றும் அருட்சகோதரி எலிசபெத் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தவமணி, காலஞ்சென்ற வெற்றிநாயகம் மற்றும் மரியநாயகம், ரஞ்சிதம், அந்தோனிப்பிள்ளை, றீற்ரா, குணசீலன், ஜோண், றொபின், அருட்சகோதரி பிரியசாந்தி, ராஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 11-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 02:30 மணியளவில் புனித யாகப்பர் ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு பின்னர் செம்மண்தீவு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
உங்கள் ஆன்மா சொர்க்கத்தில் சாந்தியடையட்டும்.