Clicky

31ம் நாள் நினைவஞ்சலி
பிறப்பு 04 AUG 1953
இறப்பு 08 OCT 2019
அமரர் மரியாம்பிள்ளை மேரி ஆஞ்சலா (மிசியா)
வயது 66
அமரர் மரியாம்பிள்ளை மேரி ஆஞ்சலா 1953 - 2019 பாஷையூர், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த மரியாம்பிள்ளை மேரி ஆஞ்சலா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

காலங்கள் ஆனாலும் ஆறாது எம் இதயம்
அம்மா உனை தேடுகின்றோம் அலறுகின்றோம்
ஆறுதல் தான் தந்திடம்மா கனவிலே வந்திடம்மா
அயராது உழைத்தாயே அனுபவங்கள் தந்தாயே
அன்புடனும் பண்புடனும் அத்தனையும் சேர்த்தாயே 

நீ பெற்ற குஞ்சுகள் நாம் நிழல் இன்றி தவிக்கின்றோம்
எம் கைபிடித்த மருமக்களும் தவமாய் கிடக்கின்றனர்
பேரக்குஞ்சுகள் நின் குரல் தேடி அலைகின்றனர்
என்ன தவம் செய்தோமோ நீ எமக்கு கிடைத்திடவே
உன் உடல் தான் பிரிந்தாலும் நீ என்றும் எம்முடனே
உங்கள் நினைவுகளைக் காலமெல்லாம் சுமந்து நிற்போம்
அன்பான கணவர், பாசமிகு பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
சகோதரர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள்

சுமைதந்த எம் வேதனையின் 31வது நாளின் நினைவுகளை சுமந்து எமது அன்னைக்கு நாம் திருப்பலிப் பூசை ஒப்புக்கொடுக்கப்படும் நாள் 09-11-2019 சனிக்கிழமை பி.ப 4:00 மணிக்கு எம் துயர்ப்பகிர்வில் நேரில் வந்து பங்குகொண்டோர், நேரில் வரமுடியாமல் தொலைபேசி ஊடாகவும் துயர்பகிர்ந்தோருக்கும் கடமைப்பட்டுள்ளோம். குறைகள் இருப்பின் மறந்து அன்னையின் ஆத்மசாந்திக்கான திருப்பலிப் பூசையில் பங்குகொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices