1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மனோன்மணி துரையப்பா
வயது 92
Tribute
22
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். அச்சுவேலி தெற்கு, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மனோன்மணி துரையப்பா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்கள் மட்டும் உன்னுருவை
காண்பதற்கு துடிக்கிறது!
காதுகளும் உன் குரலை
கேட்டிடவே விரிகிறது!
சிந்தையிலே உன் நினைவு
சிறகடித்து பறக்கிறது!
எண்ணங்களில் உன் நினைவு
இறுக்கமாக அணைக்கிறது!
அன்பு பாசம் நேசம் பொழிந்து
எங்களை கட்டி அணைத்தாயே!
வாழ வழிகாட்டி வையமெலாம்
புகழ வைத்த தெய்வமே!
பாரில் தவிக்கின்றோம்
பாசத்திற்கு ஏங்குகின்றோம்
அம்மா என்றழைக்கஉள்ளம் துடிக்குதம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
குடும்ப உறவினர் அனைவருக்கும்,எனது குடும்ப சார்பாக ஆழ்ந்த அனுதாபம்கள்