
அன்புள்ள அம்மம்மா, முதலாம் திகதியன்று உங்களை அழைத்து புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லுவோம் என்று நினைத்தேன். இரண்டாம் திகதி புஷ்பாமாமிக்குப் பிறந்தநாள் தானே, அடுத்த நாள் அழைப்போம் என்று விட்டுவிட்டேன். ஆனால் நான் அழைப்பதற்கு முன்பே உங்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள் என்பதை அறிந்தேன். இனிமேல் உங்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகளே சொல்லமுடியாமல் போய்விடும் என்று நான் எண்ணவில்லை.... அம்மம்மா, நீங்கள் உங்களுடைய பேரப்பிள்ளைகளுக்கு மட்டுமில்லாமல் உங்களுடைய அண்ணாவின் (எனது அப்பப்பா) பேரப்பிள்ளைகளுக்கும் சொந்தப் பாட்டியாக விளங்கினீர்கள். எனது பெற்றோரின் அம்மா அப்பாவோடு நான் நேரம் செலவழித்ததில்லை. அவர்கள் இல்லாத குறையை நீங்கள் தனியொருவராக இருந்து நிறைவு செய்துவிட்டீர்கள் அம்மம்மா! எனக்கு கதைகள் கேட்பது விருப்பம் என்பதால் பல கதைகள் சொல்லுவீர்கள். நீங்கள் தான் எனக்குப் பின்னல் கற்றுத் தந்தீர்கள். தபால் முத்திரைகள் சேர்க்கும் பழக்கமும் உங்களிடமிருந்து தான் எனக்கு வந்தது. எல்லோருடைய பிறந்தநாளுக்கும் மறக்காமல் அழைத்து வாழ்த்துவீர்கள். இனிமேல் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் உங்களின் ஞாபகம் தான் வரும். எங்கே சென்றாலும் சொந்தங்கள், அயலவர், சினேகிதர்கள், தெரிந்தவர்கள் என உங்களைத் தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். எல்லோருடனும் உங்களுடைய குடும்பத்தினர் போல் அன்பாக பழகுவீர்கள். "நான் போனால் பிள்ளைகள் எல்லாம் கவலைப்பட போகுதுகள்" என்று சொன்னீர்களே? எங்கள் குடும்பப் பொக்கிசமே? உங்களைப் போல் இனி யார் எங்களுக்கு இருப்பார்???
Dear Appama, Although we never met, I had few fortunate moments as to when I’d listen to your mellow voice through the phone when speaking to your relatives. I was aware of your positive impacts on...