Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 13 AUG 1947
மறைவு 28 JUN 2022
அமரர் மாணிக்கம் சண்முகநாதன்
உத்தரவு பெற்ற நில அளவையாளர்
வயது 74
அமரர் மாணிக்கம் சண்முகநாதன் 1947 - 2022 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், மல்லாகம் நீதிமன்ற வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் சண்முகநாதன் அவர்களின் நன்றி நவிலல்.

"காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தில் மாணப் பெரிது”

திருவாளர் மாணிக்கம் சண்முகநாதன் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு அகம்நாடி வந்து ஆறுதல் கூறியோருக்கும், உடனிருந்து உதவியோருக்கும், தொலைபேசிமூலமும், இணையவழியூடாகவும், லங்காஸ்ரீ மூலமும் ஆறுதல் கூறி அஞ்சலி செலுத்திய உள்நாடு, வெளிநாட்டாருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரம், மலர் வளையங்கள், பதாதைகள் வெளியிட்டோருக்கும் இறுதிச் சடங்கில் பங்கேற்று அஞ்சலி உரை வழங்கியோரிற்கும் அஞ்சலி செலுத்திய அனைவரிற்கும், ஈமைக்கிரியை நிகழ்வை பல மணி நேரமாக நேரலைப் பதிவு செய்த துயர் பகிர்வு நிறுவனத்தினர்க்கும் அந்திமகாலச் சேவைகள், பணிவிடைகள் நடத்த உதவியோருக்கும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அன்னாரைத் தாங்கிய பாடையினை மயானம் வரை தூக்கிச் சென்றவர்களிற்கும், அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற அனைத்து கிரியைகளையும் வழிநடத்தி உதவியவர்களிற்கும் உண்டி தந்து உதவியோருக்கும் அன்னார் நோயுற்றறிருந்த வேளையில் அவருக்கு சிகிச்சை அளித்த வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரிற்கும், இம்மலரை சிறந்த முறையில் உரிய காலத்தில் அச்சிட்டு உதவியவர்களிற்கும் அந்தியேட்டி நிகழ்வுகளில் பங்கு கொண்டு உதவி நல்கியோரிற்கும் மற்றும் துயர்ருற்ற குடும்பத்தினர்க்கு உதவி புரிந்த அனைத்து அன்பர்களிற்கும் எமது செஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.