யாழ். கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் அருச்சுணராசா அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும். .
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் 03-10-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலை 06.00 மணியளவில் கீரிமலையிலும், வீட்டுக்கிருத்திய கிரியைகள் 05.10.2023 வியாழக்கிழமை அன்று மதியம் 11.00 மணியளவில் அன்னாரது தம்பியின் இல்லத்தில்(கரணவாய் தெற்கு) நடைபெற உள்ளது. அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்பசகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
மணியகாரன் தோட்டம்,
கரணவாய் தெற்கு,
கரவெட்டி
ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றோம் .உங்கள் துயரில் நானும் பங்கு கொள்கின்றோம்.