Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மலர்வு 19 MAY 1930
உதிர்வு 17 MAR 2024
அமரர் லோகேஸ்வரி செல்லத்தம்பி
வயது 93
அமரர் லோகேஸ்வரி செல்லத்தம்பி 1930 - 2024 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், நாவலடி ஒழுங்கை மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட லோகேஸ்வரி செல்லத்தம்பி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

நாட்கள் 31 ஆகியும்
எங்கள் இதயங்களில் என்றும்
 நீங்காமல் குடியிருக்கும் அன்னையே!

நீங்கள் எங்களுக்கு செய்த
நன்மைகள் எண்ணி முடியாதவை
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை
உங்கள் நினைவுகள்
எத்தனை நாட்கள் சென்றாலும்
எம் இதயத்தில் இருந்து அகலாது

இனிய தாயாக இல்லறத்தில்
வாழ்ந்தீர்கள் அம்மா!
ஆயிரம் நிலவுகள் வாழ்வில்
வந்து மறைந்தாலும் ஒற்றைச் சூரியனாய்
பிரகாசித்தீர்கள் அம்மா!

நாட்கள் 31சென்றாலும்
ஆறவில்லை மனது
நாட்கள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நினைவுகள்!


அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 13-04-2024 சனிக்கிழமை மு.ப 07:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்க்கரையிலும் வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 15-04-2024 திங்கட்கிழமை மு.ப 08:30 மணிமுதல் 11:30 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற இருப்பதனால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:
சுதுமலைச்சந்தியடி,
நாவலடி வீதி,
மானிப்பாய்

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 24 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.