1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் குமாரசாமி சிவசுப்பிரமணியம்
ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்- நீர்ப்பாசனத் திணைக்களம்
வயது 88
Tribute
4
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். மாவிட்டப்புரம், சண்டிலிப்பாய் மாசியப்பிட்டி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த குமாரசாமி சிவசுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 12-12-2022
ஓராண்டு ஆனாலும்
உள்ளம் எல்லாம் தேம்புதையா
மனதினிலே நினைவுகளை
மறக்காமல் தந்துவிட்டு
மாயமாய் மறைந்து சென்றாயே!
ஆண்டுகள் ஒன்று ஓடி
மறைந்ததப்பா ஆனாலும்
எங்கள் கண்களில் வழிந்தனீர்
காயவில்லையே!
எம்முயிரான எங்களப்பாவே!
நீங்கள் இறைவனடி சேர்ந்து ஓராண்டு
கடந்து விட்டாலும் நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!
வாழ்க்கை என்பது
இறைவன் வகுத்த வரைதானே!
அடுக்கடுக்காக பன்னிரண்டு மாதங்களாகின
அருகில் நீங்கள் இல்லாததால்
உங்கள் அன்புதனை இழந்தோமே!!
உமது ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!
தகவல்:
குடும்பத்தினர்