யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட குலசேகர் அஸ்டலட்சுமி அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியைகள் 08-10.-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் வீட்டுக் கிரியைகள் நடைபெற்று, 10-10-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இல்லத்தில் நடைபெறவுள்ள ஆத்ம சாந்திப் பிரார்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டுமுகவரி:
266/29, சிலாபவீதி,
நீர்கொழும்பு.
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம் மாமா குடும்பம் Holland