

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குலசேகர் அஸ்டலட்சுமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் வீட்டு குல விளக்கே அம்மா
எமை விட்டு பிரிந்தது ஏனோ
அன்பின் நிறைவிடமே அம்மா
பாசத்தோடும் சிரித்த முகத்தோடும்
கண்ணின் இமை போல் என்னை காத்து
துன்பம் துயரம் தெரியாது எமை வளர்த்து
தரணியிலே எமை உயர வைத்து
இன்பமுடன் நாம் வாழ வழிகாட்டி
எமை எல்லாம் ஆழாத்துயரில்
ஆழ்த்தி
விட்டு சென்று ஆனதம்மா ஓராண்டு
ஓராண்டு காலமதில் உமைப் பிரிந்து
ஒரு நொடிப்பொழுதும் உமை மறவாமல்
நாம் வாழ்கின்றோம் எத்தனை ஆயிரம்
உறவுகள்
எமை அணைத்திட இருந்தாலும்
அத்தனையும் எம் அம்மாவுக்கு நிகராகுமா?
ஆண்டுகள் பல ஆனாலும்
ஆறாது எம் துயரம்
நீங்காது
அம்மா எம் மனதில் உன் நினைவு
இன்னொரு பிறப்பு ஒன்று
உண்டெனில்
உன் பிள்ளைகளாக
மட்டுமே நாம் பிறந்திட வேண்டும் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டிநிற்கின்றோம்.
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதர, சகோதரிகள்..!
மைத்துனர், மைத்துனிகள்..
யாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நீர் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குலசேகர் அஸ்டலெட்சுமி (ராணி) அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 29-08-2024 வியாழக்கிழமை அன்று
அன்னாரின் இல்லதில் நடைபெற உள்ளதால் அத்தருணம் நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம் மாமா குடும்பம் Holland