நினைவஞ்சலி

அமரர் கிருஷ்ணபிள்ளை அன்னம்மா
(கந்தரோடை ஆச்சி)
வயது 94
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கரம்பன், யாழ்ப்பாணம், கொழும்பு வெள்ளவத்தை, மொரட்டுவ சொய்சாபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணபிள்ளை அன்னம்மா அவர்களின் 7ம் மாத நினைவஞ்சலி.
அம்மா என்றழைக்க அம்மா இன்றில்லை
ஐயாவை சிறுவயதில் இழந்த எமக்கு எல்லாமான ஓர் உன்னத ஆன்மா
அம்மம்மா, அப்பம்மா என்றழைக்க இன்று நீங்கள் இல்லை
பேரப்பிள்ளைகளில் உங்கள் பாசம் எங்களுக்குத்தான் தெரியும்
பூட்டி என்றழைத்தால் புன்னகை தவழும் உங்கள் முகம்
என்றென்றும் நிலைத்திருக்கும் எங்கள் உள்ளத்தில்
உயிருள்ளவரை உங்களை மறக்கோம் என்றென்றும்
எங்களுடன் வாழும் ஓர் உன்னத ஆன்மா நீங்கள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்