Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 25 SEP 1928
இறப்பு 16 JAN 2024
திருமதி கிருஷ்ணாம்பாள் தவவிநாயகம்
வயது 95
திருமதி கிருஷ்ணாம்பாள் தவவிநாயகம் 1928 - 2024 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Aulnay-sous-Bois ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணாம்பாள் தவவிநயாகம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரது அந்தியேட்டி அமரராகி 23 வது தினம் 07-02-2024 அன்று காசி நகரில் கங்காதேவி நதிக்கரையில் அவரது அஸ்திக்கு கிரியைகள் நடைபெற்று கங்கை நதியில் அவரது அஸ்தி கரைக்கப்பட்டது. பின் அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டியும் உலக அமைதி வேண்டியும் கங்காதேவி க்கு நன்றி கூறும் வகையில் அன்று மாலை தீபாராதனை பூஜையும் நடத்தப பெற்றன. வரும் வியாழக்கிழமை 15-02-2024 அன்று அவரது இல்லத்தில் வீட்டுக்கிருத்தியம் நடைபெற உள்ளது.

இங்ஙனம், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
Tribute 38 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.