யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், இருபாலை கோப்பாயை வதிவிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கோவிந்தபிள்ளை செல்வராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
மாதம் ஒன்று ஆகியும் மனம் ஆற மறுக்கிறது
சிரித்த முகத்தோடும் செயற்திறன் தன்னோடும்
செம்மையாய் வாழ்ந்த அப்பா!
நாட்கள் முப்பதொன்று கடந்தாலும் ஆறிடுமோ
உங்கள் நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணி போல் எம்மைக் காத்த
அன்புத் தெய்வமே ஆறிடுமோ
எங்கள் துயரம் விதித்ததோர் விதியதால் விண்ணகம்
சென்றதைப் பொறுத்திட முடியுமோ தான்?
அப்பா, உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்!
பாசத்தின் பிறப்பிடமாய் பாரினிலே!
நேசத்துடன் எங்களை ஆளாக்கி
நேர்மையுடன் வாழ்ந்தீர்களே அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப்பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், எமது தந்தையாரின் மறைவுக்கு பின்னர் நிலத்திலும் புலத்திலும் இன்று வரை எமக்கு உணவு மற்றும் சிற்றுண்டிகளை பரிமாறிய அனைவருக்கும், நினைவுப் பதாகைகளை வெளியிட்டவர்களுக்கும், துண்டுப்பிரசுரங்களை வெளயிட்டவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 12-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் கீரிமலை புனிதத்தீர்த்தக்கரையிலும் வீட்டுக்கிருத்தியம் 14-08-2025 வியாழக்கிழமை அன்று முஅ.ப 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்திலும் நடைபெற இருப்பதால் அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்பசகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
353/9c மன்னார் வீதி,
வேப்பங்குளம் வவுனியா.