அன்புள்ள தாத்தாவிற்கு, சின்ன வயதிலிருந்து இன்று வரை எங்கள் ஒவ்வொரு நினைவிலும் உங்கள் அன்பும், உங்கள் அரவணைப்பும் நிறைந்திருக்கிறது. எங்களை கையில் தூக்கி வளர்த்ததும், சிரிக்க வைத்ததும், எங்களுக்காக எப்போதும் பிரார்த்தித்ததும், அனைத்தும் இன்று கண்முன்னே நிற்கிறது. இன்று நீங்கள் எங்களுடன் இல்லையென்பதை ஏற்றுக்கொள்வது மிகவும் வேதனையாக இருக்கிறது. இந்த இழப்பு எங்கள் இதயத்தில் என்றும் ஆறாத வலியாக இருக்கும். ஆனால், நீங்கள் எங்களுக்கு கற்றுக்கொடுத்த அன்பு, பண்பு, குடும்பத்தின் அருமை ஆகியவற்றை வாழ்நாள் முழுவதும் நாங்கள் சுமந்து செல்வோம். அதுவே உங்களுக்கு நாங்கள் செய்யும் மிகப் பெரிய மரியாதை. நீங்கள் உடலால் எங்களை விட்டுப் பிரிந்தாலும், உங்கள் நினைவுகளும் ஆசீர்வாதங்களும் எங்களோடு என்றும் இருக்கும். உங்களை மிகவும் நேசிக்கும் உங்கள் பேரப்பிள்ளைகளும், பூட்டப்பிள்ளைகளும். “எங்கள் கண்களில் கண்ணீர் இருக்கலாம்; ஆனால் எங்கள் இதயத்தில் நீங்கள் என்றென்றும் வாழ்வீர்கள் தாத்தா,தொக்கையப்பா.”
எங்கள் தொக்கையப்பா! நீங்கள் இன்று எம்முடன் இல்லை என்பதை ஏற்ற முடியவில்லை. கதியற்று நின்ற எம்மை வாழ வைத்தவர்களில் நீங்களே முதன்மையானவர். எம்மைப்போல் பலரையும் வாழ வழி வகுத்து தந்தவர் நீங்கள்....