


ஆசை மாமாவே சொல்லாமல் எங்கு சென்றாய் அன்பின் உருவம் நீயே பெற்றவர்கு அடுத்த நிலையில் இருந்து கண்டிப்பாய் எமை வளர்த்தாய் குழந்தையாய் நாம் பிறந்தபோது எமைத்துக்கி தொட்டிலில் போட்டாய்மாமா பருவம் வந்தபோது பக்குவமாய் நல்லெண்ணைய் தந்தாயே மணம்முடிக்கும்போது ஏக்கத்துடனும் பூரிப்புடனும் ஓரமாம் நீ நின்று பார்த்துக்கொண்டு நின்றதும் என் குழந்தைகள் பிறந்தவுடன் தாத்தாவாகி அள்ளித் தூக்கிட ஓடிவந்து நிற்பாயே நல்லது கெட்டது என்றாலே நீங்களின்றி நடந்திடுமா ? எங்கள் விடுமுறைக்காலத்தில் எமக்கு நீங்கள் வாழ்ந்த சுதந்திரபுரமே சொர்க்கபூமி அப்பாவிடம் அனுமதி பெறுவது மிகவும் கடினம் ஆனாலும் முயன்று பெற்றிடுவோம் எமக்காக உடையார் கட்டில் காவல்இருந்து நான்கு பேர் என்றாலும் சயிக்கிலில் இருத்தி தோழிலே எனைசுமந்த அந்நாள் ஞாபகங்கள் கொல்லுது மாமா எழுந்து வா மாமா... சின்ன மாமாஎன்று ஆசையாய் அழைத்திடுவோம் நாங்களோ உங்களுக்கு எண்ணற்ற மருமக்கள் ஆனாலும் எல்லோரையும் ஒரேவிதமான அன்பையே சொரிவாயே இன்று உங்கள் அருகிலிருந்து எமது அன்பையும் துக்கத்தையும் சொல்லி அழ முடியாத பாவிகளாய் தவிக்கிறோம் மாமா .. மாமா..உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்...அனைத்து உறவுகளும் ஆறுதலடையுங்கள் நாம் பாவப்பட்ட உறவுகளானோம் ஏன்எனில் ஒன்றுகூடமுடியாத துர்ப்பாக்கிய உலகில்வாழ்ந்துவருகிறோம்...