Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 12 APR 1953
விண்ணில் 15 AUG 2019
அமரர் கந்தையா வேலாயுதம் 1953 - 2019 கண்டாவளை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கிளிநொச்சி கண்டாவளையைப் பிறப்பிடமாகவும், வரணியை வசிப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா வேலாயுதம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று ஆன போதும் துக்கம் குறையவில்லை அப்பா
தங்களின் இடைவெளியை யாராலும் நிரப்ப முடியவில்லை
தாங்கள் மகிழ்ந்திருந்த தருணங்களும் சிறிய நினைவுகளும்
கண்முன் காட்சிகளாய் விரிந்து மனது கனக்கிறது!

உங்களை அன்றாடம் நாம் கனவில் காண்கின்றோம்
ஏங்கி எழுந்து ஏமாந்து போகிறோம்
பேரர்கள் எல்லோரும் உங்கள் நினைவுகளை மீட்க கோரி
ஆவலாய் வந்து எம்முடன் அமர்கின்றனர்

மானிட வாழ்வென்றால் நிலையாமையே ஆனாலும்
தங்களின் அறவாழ்வும் இன் சொல்லும் நம்மிடமும் பிறரிடமும்
நீங்காத நினைவுகளாய் நீண்டிருக்கும்

எங்கள் குல தெய்வத்திற்கு பக்தியுடன் எம் இதய அஞ்சலிகள்...
உங்கள் ஆத்மா எங்களை ஆசிர்வதிக்குமாக...

தகவல்: குடும்பத்தினர்