

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும், கனடா Mississauga வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா தியாகராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 20-04-2025
அன்பே உருவான எங்கள் அப்பா
ஆண்டுகள் ஒன்று ஆச்சுதப்பா
ஈடில்லா எங்கள் பொக்கிஷம் நீங்கள்
தானே உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
ஆண்டுகள் எத்தனை ஆனாலும்
மனம் ஆற மறுக்கிறது
சிரித்த முகத்தோடும் செயற்திறன்
தன்னோடும் செம்மையாய் வாழ்ந்த அப்பா!
விதித்ததோர் விதியதால் விண்ணகம்
சென்றதைப் பொறுத்திட முடியுமோ தான்?
அப்பா, உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது உங்கள் நினைவலைகள்!
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எம்முன்னே
உங்கள் முகம் எந்நாளும்
உயிர் வாழும் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
சகோதரங்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்...
Our hearts are filled with sadness and tears but our memories are filled with smiles and laughter of the good times we shared over the years