யாழ். சாவகச்சேரி தபால் கந்தோர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சின்னம்மா அவர்களின் நன்றி நவிலல்.
அம்மா என்றழைத்தோமே
அன்பாய் உபசரித்தீர்
பண்பாய் பாசத்தோடு பேசியதெல்லாம்
பக்குவமாய் உள்ளத்தில் இருக்குதம்மா
பூவிலும் மென்மையுள்ளம்
புன்னகை ஏளிரும் முகம்
நேற்று வரை எம்மோடு பழகிய அம்மா
இன்று எம்மோடு இல்லாமல் எங்கே போனீர்கள்
கண் கலங்குகிறேன் அம்மா
கணப்பொழுதில் வருவீர்களா
அன்பான மகள், மருமகன், பேரப்பிள்ளைகள்
சிவரஞ்சனி, அருந்ததிநாதன், அனோஜ், அஜய், அனிக்கா
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.