கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
விதி வரைந்த பாதையில்
எங்களுக்கு வாழ்வாய் வந்தவள் நீ அம்மா…
இன்று நினைவாக மட்டுமே நின்றாலும்,
எங்கள் நெஞ்சில் நித்தியமாக உயிரோடு இருப்பவள் நீ…
நீ கொண்ட மீளாத நித்திரை
எங்கள் உள்ளங்களை நொறுக்கி விடுகிறது…
காலம் நகர்ந்தாலும்,
உன் உருவம் நிழலாய் எங்களைத் தொடர்கிறது…
காலத்தின் அழியாத சுவடாய்
எம் இதயத்தில் பொறிக்கப்பட்டவள் நீ…
உன்னை மறப்பது எமக்கு இயலாதது,
ஒவ்வோர் நாளும் கண்ணீரால்
உன் நினைவுகளை நனைக்கின்றோம் அம்மா…
உன் பிரிவின் வெற்றிடம்
எங்கள் வாழ்வில் என்றும் நிரம்பாதது…
உன் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை ஏங்கிப் பிரார்த்திக்கின்றோம்…
அன்பின் அம்மா…
நீ எங்களுடன் இல்லை என்றாலும்,
எங்கள் ஒவ்வோர் மூச்சிலும் நீ வாழ்கிறாய்… 🤍
ராசாத்தி
Write Tribute