Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கந்தையா விஜயகுமார்
மறைவு - 25 AUG 2013
அமரர் கந்தையா விஜயகுமார் 2013 பலாலி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

பலாலியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா விஜயகுமார் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஒரு தாயின் வயிற்றில் நாம் ஒன்றாய்ப் பிறந்தோம்
 இன்று எம்மை தவிக்கவிட்டு எங்கே நீ சென்றாய்?
உடன் பிறப்பே உன் உறவே உயர்ந்தென்று இருந்தோம்
 எம் உயிரிலும் உதிரத்திலும் ஒன்றாய் கலந்திருந்தோம்
 பாதியிலே நீ எமைவிட்டுப்பிரிய நாம் துவண்டு விட்டோம்   

தம்பியாய் நல்ல அண்ணனாய்
எப்போதும் எம்மோடு இணைந்து நின்றவனே!
ஆண்டு பத்தல்ல ஆயிரம் ஆனாலும்
 மறக்க முடியாத மகத்துவம் நீ...

நினைவில், நித்திரையில், எங்கள் உணர்வில்
 உள்ளத்தில் எப்போதும் - நீ கனவில்,
 கற்பனையில் எங்கள் கண்பார்க்கும் இடமெல்லாம் - நீ

நீ இல்லாத நாட்கள் உயிரில்லாத
நொடிகளாய் - போகுதய்யா..
 நீ வாழ்ந்த வீடு நீ கடந்த இடம் என்று
உன்னை நாங்கள் நினைத்திருக்க நீ மட்டும்
 எங்கு போனாய் எங்களைவிட்டு - ஏன் பிரிந்தாய்?

பத்து ஆண்டு என்ன பலனூறு ஆண்டுகள்
சென்றாலும் உங்கள் நினைவுகள் பசுமையாக
எப்போதும் எம் இதயத்தில் தெய்வமாய் சுமந்து நிற்போம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices