Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 SEP 1940
இறப்பு 24 JUL 2019
அமரர் கந்தையா கனகசபை யோகநாதன்
J.P உரிமையாளர்- சரவணபவன் ஆபரண மாளிகை சாவகச்சேரி, நிறுவனர்- திருபுகழ் மண்டபம்- மீசாலை
வயது 78
அமரர் கந்தையா கனகசபை யோகநாதன் 1940 - 2019 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். சாவகச்சேரி சங்கத்தானை குமரகோட்டம் தாமோதரம்பிள்ளை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கனகசபை யோகநாதன் அவர்கள் 24-07-2019 புதன்கிழமை அன்று முருகப்பெருமான் திருவடிகள் சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசபை, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

செந்திமயூரன், திருவேரகன்(லண்டன்), சிவசேந்தன்(லண்டன்), தேவகுஞ்சரி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கீதாலக்சுமி, பானுஜா, இரகனி, விமலச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம், செல்வமலர், செல்வராசா, சின்னையா நவநீதம், காலஞ்சென்ற நீலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புவனேஸ்வரி, ஈஸ்வரதாஸ், கமலேஸ்வரி, மனோகரன், இரஞ்சிதன், ஸ்ரீதரன், பாஸ்கரன், ஸ்ரீகாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விசாகன், கார்த்திகன், தேசிகன், வர்ஷிகா, ஆதிரன், தீட்ஜா, மதுராங்கினி, யோகவிந்தன், விசாகினி, அபிசாகினி, லக்ஜாயினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: செந்திமயூரன்(மகன்)