Clicky

12ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 15 DEC 1930
விண்ணில் 11 OCT 2011
அமரர் கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம்
(ஒய்வுபெற்ற பிரதமலிகிதர், சமாதான நீதவான்)
வயது 80
அமரர் கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் 1930 - 2011 கைதடி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.   

குடும்பத்தின் குலதெய்வமே
 பாசத்தின் உறைவிடமே அப்பா!
நீங்கள் எம்மை விட்டுப் போய்
வருடங்கள் பன்னிரண்டு ஆனதே
 வரமாக எமக்கு கிடைத்த ஐயா
வேவளமாக எமைக் காத்த ராஜாவே
உமை வருத்தி எமைச் சுமந்தீர்
உண்மை அன்பை எமக்களித்தீர்
 உங்கள் நினைவுகள் எப்போதும்
 எங்கள் உள்ளங்களில் அணையா நெருப்பாய்
 உங்கள் புன்னகை துளிர்விட்டுத் தளிர்களாய்
எங்கள் இதயங்களில் நனைத்துக்கொண்டே இருக்கும்

 எங்களின் இதய தெய்வமே, எம் நினைவிலும்
 கனவிலும் வாழ்பவரே எமை விட்டு நீங்கள்
இறைவனடி சென்றாலும் என்றென்றும்
 உங்கள் நினைவுடன் வாழ்கின்றோம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices