

-
01 APR 1938 - 06 SEP 2021 (83 வயது)
-
பிறந்த இடம் : யாழ் நயினாதீவு 3ம் வட்டாரம், Jaffna, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : யாழ்ப்பாணம், Sri Lanka Markham, Canada
யாழ். நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நாச்சிமார் கோவிலடியை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை சிவராமலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 26-08-2022
ஆண்டுக்கு ஆண்டு அழுதழுது தீர்த்தாலும்
மீண்டெழுந்நு வரமுடியா பெருந்துயர் இதுவன்றோ!
ஓராண்டு நினைவுகளில் கரைந்து துடிக்கின்றோம்
தீராத வேதனையில் வெந்து தணிகின்றோம்
வேரோடி நிற்குதப்பா உங்கள் அன்பு முகம்
வாயாரப் போற்றி வழிபட்டு நிற்கின்றோம்
ஆராதனை செய்து அழுது தொழுகின்றோம்
ஆன்மா சாந்தி பெற அன்னை தாள் பணிகின்றோம்
நயினையிலே பிறந்து, நாகம்மாள் அருளுடனே
நாகர் பேரரென வளர்ந்து, சிறந்து
கணபதியின் வளர்ப்பதனில் உயர்ந்து, நிமிர்ந்து
கண்மணியாள் அன்பதனில் கரைந்து, கனிந்து
பரமேஸ்வரியோடு இல்வாழ்வில் இணைந்து
பெறுதற்கரிய பிள்ளைகளைப் பெற்று
மருமக்கள் பேரர் எனப் பெரு வாழ்வு வாழ்ந்தவரே!
வானுலகில் வாழ்க! வானுலகில் வாழ்க!
கந்தன் கருணையிலே கல்விதனைக் கற்று,
கல்விப் பணி தன்னில் கடமை பல ஆற்றிச்
சொல்விற்பனரெனச் சொல்லும் படிக்குக்
கவிதையிலும் உரையினிலும் பெயர் தன்னை நாட்டி,
நற் பணிகள் பல செய்த சிவராமலிங்கரே!
பல்லோரும் ஏற்றப் பணிந்து நிற்கின்றோம்
ஓராண்டு நினைவுகளில் நனைந்து நின்று
ஆன்மா சாந்தி பெற வணங்கி நிற்கின்றோம
ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!!
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
யாழ் நயினாதீவு 3ம் வட்டாரம், Jaffna, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )
