
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heilbronn, Neckarsulm ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகரட்ணம் அருணகிரிநாதன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆருயிர் அப்பாவுக்கு எங்கள்
அன்பான கண்ணீர் பூக்கள்!
ஆறாண்டுகள் சென்றிருந்தால் என்ன அப்பா
உங்களின் பார்வையும் தோற்றமும் செயல்களும்
கண்முன்னே கற்றாடுதப்பா!
எம்மவர் விழிகளில் நீர் ஓடிக் கொண்டே
நினைவலைகளால் எம் உள்ளம் வாடுதே அப்பா!
பாசத்தின் கருவியாய் பண்பின் சிகரமாய்
அன்பின் திருவுருவாய் எதை நீர் செய்தாலும்
கண் போல எமை எல்லாம் காத்து
யாவருக்கும் ஆசை மொழி கூறி
அரவணைத்து பேணிக் காத்த எம் தெய்வமே!
ஆறு ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் எங்கள் மனதில்
என்றென்றும் நிறைந்திருக்கும்!
"கர்த்தர் தாமே ஆராவாரத்தோடும்
பிரதான
தூதனுடைய சத்தத்தோடும்
தேவ
எக்காளாத்தோடும்
வானத்தில்
இருந்து இறங்கி வருவார்
அப்பொழுது
கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள்
முதலாவது எழுந்து இருப்பார்கள்"
என்ற வார்த்தையை நாங்கள் விசுவாசிக்கின்றோம்
அந்த விசுவாசத்தோடு
உங்கள் அன்பு மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
Switzerland, Canada, France, Germany, UK God is always with your family