உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கைலாசபிள்ளை ஜெயந்திரராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஐந்து மின்னலென
மறைந்தாலும் எமை ஆளாக்கியவரது
பிரிவுத்துயர் அணையாது என்றுமே..
எம் மனதில் அதிகாலை சூரியனாய்
ஒளிவீசி இருந்த நீங்கள் அர்த்தம்
ஏதும் சொல்லாமல் அஸ்தமித்த ஏனப்பா???
மனித வாழ்வில் இனிமையான மென்மையான பொறுமையான
சாந்தமான பாசமுள்ள ஐயாவை எமக்கு தந்த இறைவனுக்கு
தலை வணங்குகின்றோம்..
இன்று நீங்கள் எம்மோடு இல்லை ஆனாலும் நீங்கள் காட்டிய பாதையில் தான் பயணிக்கின்றோம் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!