
-
07 MAR 1932 - 16 AUG 2021 (89 வயது)
-
பிறந்த இடம் : சாவகச்சேரி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
கண்ணீர் அஞ்சலி
அம்மாவிற்கு நன்றி ……. அன்பெனும் வடம் தொடுத்து, அகம் குளிரும் புன் சிரிப்பெடுத்து, அத்தனை மனங்கள் மகிழ, அன்புடன் அணைத்த, அம்மாவிற்கு நன்றி. அன்னையின் மடியன்றி, அடைக்கலம் வேறெங்கே, அச்சமுடன் அலைந்திடாமல், அமைதிக்கு இடம் தந்த, அம்மாவுக்கு நன்றி. கற்றலே எமக்கெல்லாம் கடைசி வழி, கற்பதுவும் இனிய அனுபவமென, கனிவு காட்டியதைக் கவர, நிறைவழி சொன்ன, ஆசிரியைக்கு நன்றி. உபசரிப்பு என்பதே உவந்தளித்தலாகும், நாவூறும் நல்லுணவை நன்றே, அன்பெனும் அமுதம் கலந்து செய்து, ‘ஆ’ வென்ற வாய்க்கூட்டிய, அன்னைக்கு நன்றி. கர்த்தரன்றி கதியேது நமக்கெலாம், காத்திரமாய் கை பிடிக்க வேறேது, ஆண்டவனே அடைக்கலமென சரண்புக, அமைதி வழி காட்டிவிட்ட, அன்னைக்கு நன்றி. வாழ்நாளெல்லாம் ஒர் நாளில் முற்றும், பிறந்தோம் வாழ்ந்தோம் என்பது பொருட்டல்ல, வாழ்நாளில் எப்படி வாழ்ந்தோம் என்பதாம். வழிகாட்டியாய் வாழ்ந்திட்ட, மாதாவிற்கு நன்றி. சென்று வா அம்மா நாமெல்லாம், மீண்டும் சந்திப்போம் இன்னோர் நாளில், நன்றாம் அதுவரையில் அமைதியில், ஆனந்தமாய் துயில் கொள், நன்றி அம்மா.
Summary
-
சாவகச்சேரி, Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Christian Religion
To Ravi and family members Our heart felt condolences Let her soul rest in peace Damayanthi, Dilshan , Mario and Marino