1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஜீவா சதாசிவம்
வயது 63
Tribute
12
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், புலோலி, மன்னார் உயிலங்குளம், கனடா Markhamஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜீவா சதாசிவம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசமுள்ள எங்கள் அம்மாவே
அன்பால் எங்களை காத்தவளே
பாசம் காட்டி எங்களை வளர்த்தவளே!
அன்பான எங்கள் பொக்கிஷத்தை
ஆண்டவனே பறித்தானே
ஓராண்டு முடிந்தாலும்
உங்களை ஏங்கி தவிக்கின்றோம் அம்மா!
அம்மா, எங்கள் அன்பு அம்மா
எங்களை விட்டு நீ பிரிந்து விட்டாய் அம்மா
ஆனால் அலை அலையாய்
உன் நினைவுகள் எம் மனதில்
அம்மா அம்மா என்று அழைத்து விட
துடிக்கின்றது எம் மனம்
அம்மா நீ அருகில் இருந்து
அரவனைத்தாய் எங்களுக்கு
ஆனால் துன்பம் வந்தபோது
துடித்து போனோம் அம்மா
நீ இல்லாமல் நாம் யாரும் அற்ற
அனாதையாய் துடிக்கின்றோம் அம்மா...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்