Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மலர்வு 17 FEB 1970
உதிர்வு 21 MAY 2025
திருமதி இந்திரகுமார் நாகநந்தினி
வயது 55
திருமதி இந்திரகுமார் நாகநந்தினி 1970 - 2025 இணுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், இணுவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திரகுமார் நாகநந்தினி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

பூத்திருந்த இடங்கள் எல்லாம்
 பாலைவனம் போல் தெரிய
 நடந்து போன பாதையில்
 உங்கள் கால்தடங்களே

 விடிகின்ற வேளைகளில்
 கண்ணெதிரே நிற்பவர் இல்லையே
 என ஏங்க கண்ணீர் வழிகின்றதே

 சூரியன் உதிக்க மறந்தாலும்
 கடலலை கரைதொட மறந்தாலும்
 கண்கள் இமைக்க மறந்தாலும்
 இதயம் துடிக்க மறந்தாலும்
 தங்களின் நினைவுகளை
நாங்கள் எப்படி மறப்போம்?

 நாட்கள் 31 கடக்கட்டும்
 வயதுகள் ஓடிச் செல்லட்டும்
நீங்கள் அருகில் இருப்பதாய்
 வாழ்க்கையை தொடர்கின்றோம்...   

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 18-06-2025 புதன்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும் வீட்டுக்கிருத்தியகிரியைகள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் அவரது இல்லத்திலும் நடைபெவுள்ளதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

வீட்டு முகவரி:
இந்திரவாசம்,
அளவோடை வீதி,
இணுவில் மேற்கு,
இணுவில்

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.