யாழ். ஊரிக்காடு சிதம்பராய் வடக்கு வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இல 37, அன்பு போன் மொபைல் டெக் பழைய கச்சேரி முன்பாக A9 வீதி அருகாமை கிளிநகர் கிளிநொச்சியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட குணாளன் லீலாபிலோமினா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அமரர் குணாளன் லீலாபிலோமினா(லீலா) அவர்களின் அந்தியேட்டிக்கிரியை 21-06-2025 சனிக்கிழமை கீரிமலை புனித தீர்த்தக்கரையில் மு.ப 07.00 மணியளவில் இடம்பெற்று, வீட்டுக்கிருத்தியநிகழ்வுகள் 23-06-2025 திங்கட்க்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற இருப்பதனால் அத்தருணம் தாங்களும் வருகைதந்து ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், மதிய போசனத்திலும் கலந்துகொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
அன்பு மொபைல் ரெக்,
இல.37, A9 வீதி,
கிளிநொச்சி.
ஊரில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தாலே எம்மையரியாமல் வரும் பயம், அன்று வந்தது. யோசிக்க நேரம் இன்றி துவண்டோம் எம் மூச்சு காற்று ஊர் நோக்கிய பயணமாய் ஓடினோம்.. மருத்துவமனை உங்களுக்கு புதிதல்ல புற்றுனோயோடு பல்லாண்டு போராட்டம் நோய்க்கே பயம் வந்து உங்களை விட்டு தூரமாய் ஓடும்..
மருத்துவமனையில் ஆறுநாட்கள் அமைதியாய் பேச்சின்றி இதயத்துடுப்புக்காய் காற்றின் வேகம் நெஞ்சை பிலித்தது, பார்க்க வந் தோம், தூரதேசம் இருந்து கண்கள் ஈரமாய் ஒரு முறையாவது எம்மை பார்ப்பீர்களோ என்ற பேராசையில் நடந்தது போராட்டம் மெல்ல மெல்ல நனவாக..
கண் விழித்திருர்கள் கடைசி ஐந்து நாள் புன்னகை சிரிப்புடன், நகைச்சுவையான பேச்சு, எம்மை பேராசை படவைத்ததே வீட்டுக்கு வந்துவிடுவிர்கள் என்று வியப்போடு நாம் எல்லோரும், மகிழ்வோடு நாம் இருந்தோம்..
படைத்தவனை நாடி பலகோயில் வழிபாடு சென்றோம், பல நேர்த்தியுடன் எல்லோரும் இறைவனடிம் மன்றாடி, நீங்கள் வீடு வருவீர்கள் என்று மகிழ்வோடு நாம் இருந்தோம்..
அன்று காலை நல்லதோர் விடியலாக இருக்கவேண்டும் என்று எண்ணி எல்லோரும் மருத்துவமனைக்கு விரைந்தோம், எங்கள் உணர்வுகள் பயமுறுத்த சந்தேக அலை அடித்து உங்கள் இதயம் செயல்பாடு மெல்ல குறைந்து செல்வதை எங்கள் எல்லோரின் கண்கள் கணமாக என்னசெய்வதரியாமல் தவித்து நிக்க. ஏமாற்றம் மட்டுமே எல்லாம் உதிர்ந்துபோக எஞ்சி இருக்கும் வேர் என்ற மூல உயிரோ போனதேனோ?
உங்களோடு பேசியவர் உள்ளம் என்றும் துன்முகத்தை நாடியதில்லை என்னை வழியனுப்ப வரவைத்து நெத்தியிலே முத்தம் இட்டு, இரண்டு கையாளும் உயிரற்ற கண்ணை நான் முடுவேன் என்று நான் நினைக்கவில்லை, இன்று மூடிவைத்து உங்கள் முகத்தை நாங்கள் கூடிவந்து கொண்டு செல்லும் கொடிய நிலை எமக்கு ஏன்?
உண்மையே நீங்களாகி உறவுகளை அரவணைத்தீர்கள்.. வீட்டில் செல்லமாக பேசினாலும் கோபமாக பேசினாலும் குழந்தைத்தனம் வந்துவிடும் அறியாமல் தவறுசெய்தால் அறிவுரையால் ஆசனாவீர்கள்
ஏழுமோ ஏலாதோ உங்கள் தைரியத்தை பார்ப்போம் அடுப்பம் தரையில், உங்கள் புன்னகை சிரிப்புடன் வீடு தேடி வந்தோர் யாரும் உங்கள் கையால் உணவுன்றி போனோர் இல்லை, அன்னத்தை அள்ளிக்கொடுத்த கை அமைதியாய் ஆனதேனோ இந்த வீட்டில் உங்களை போல் யாரையும் இனி நாங்கள் காண்போம்?
எதுவும் அறியாத வயது, துடியாய் துடிக்கும் குறும்புகள் நிறைந்த பிள்ளைகள், இனி உங்கள் இன் முத்தத்தை அவர்களின் கண் முன், இனி எங்கு காணுங்கள். இரண்டு பிள்ளைகளின், பிள்ளைகளை பேர் அன்போடு பார்த்தீர்கள் செல்லமாய் கொஞ்சி விளையாடி உறவாட இனி, பெற்ற பிள்ளைகளுக்கு ஆசையாய் அம்மம்மா, அப்பம்மா இனி இல்லையே இவ் பூமி பந்தில்..
நீங்கள் வாழும் போது நிறைவேற ஆசை மற்றும் இரண்டு பிள்ளைகளின் பேரப்பிள்ளைகளை மடிதனில் தவழ உட்கார பேறு பெற்றீர்கள் என்று பேராசை ,கடைசி நொடிவரைக்கும் உங்களுக்குள் நிறைவேறாத ஆசை நாம் வாழும் வரைக்கும் எப்போதும் எமக்கு இருக்கும்..
நீங்கள் நாட்டிய நிழல் மரங்கள் உங்கள் சிரித்த பேச்சின்றி மவுனமாய் உறங்க.. உங்கள் கால்பாதம் படிந்த மண் காற்றோடு கோபம் கொள்ள. எமக்கும் இப்போது நீங்கள் இல்லாத வீடு பிடிப்பின்றி போக..
நிறைய குருவிகள் கூடு அமைக்க வீடு வீடாய் பறந்து பறந்து போய் பார்த்து களைத்து உங்கள் வீட்டின் யாம் மரத்தின் பசிக்கு கூட்டமாய், கூடும் கூடாரமாய், அந்த மரத்துக்கும். உங்கள் மனமே, பசிப்போர் யார் வந்தாலும் பசியை போக்கும் பேரன்போ? சொத்தென சேர்த்த சொந்தங்கள் கதிகலங்க அனைவரையும் கண்ணிரில், கை பேசி நிறைத்து நிக்கும் உங்கள் முகங்கள்.. உங்கள் மறைவு நேரம் தொட்டு இன்று வரைக்கும், நாள்தோறும் என்னை அறியாமல் கைபேசியில் விரல்கள் போகும் உங்கள் புகைப்படம் தேட,
என்னை அறியாமல் பார்வையில் உங்கள் இன் முகம் என்னை அறியாமல் கண்கள் கண்ணீரில் விழினிரம்பும், ஆறு மாத காலம் அளவில்லா சுற்றிலா, அளவில்லாப் புன்னகை தொடர்ச்சியான பயணத்தில் உங்கள் சிரித்த முகம் எப்போதும் என் கண்முன்னே, உங்கள் உடலோடு கூடவே இந்த வீடும், வெறிச்சோடி போனது எமைவிட்டு சென்றாலும் என்றென்றும் துணைநின்று..
எம் கண்ணுக்கு தெரியாமல் எமக்கு நல் வழி காட்டிடுவீர்கள், உங்கள் மகள்ளுக்கு மட்டும் தாயல்ல எனக்கும் இன்னொரு தாயாக அன்பான வார்த்தைகளால் அரவணைக்கும் உங்கள் குணம் இனி இல்லை, இனி இல்லை ஒருபோதும்..
எம்மை எல்லோரையும் ஏமாத்திவிட்டிர்கள் ஒரே நாளில் சட்டென்று வந்த பெரிய துக்கம் இது, சிறுகச் சிறுக எம் இதயத்தில் பெரிய இடியாய் சத்தம் இன்றி சொல்லாமல் மவுனமாய் கண்ணீர் என்று விழுந்து பேர் இடி இது.. உங்களை விரும்பாதோர் யாருமில்லை, வெறுப்போர் என்று எவருமில்லை. இதய நோய்கொண்டு நீங்கள் போக, விதியெனும் விளையாட்டில் விடையேதும் சொல்லாமல் கொள்ளாமல் மூத்த மகனோடு, மகிழ்வோடு உரையாட, பூமிதனில் மகன் உங்களை விட்டுச்சென்ற, மகனுக்கு தெரியாத பல ஆண்டு கதை பேச.. உங்கள் ஆசை நனவாக. எம் எல்லோரையும் ஏமாத்தி விடைபெற்று போனதேனோ?
பிறப்பின் போது தாய் கண்ட உடல் வலி மரணம் கண்டு உங்களுக்கு நாம் ஜனனம் தரவே நம் எல்லோரின் பேராசை, நாம் விரும்பியும் காலம் நமை பிரிக்கும் போது நாம் சுமக்கின்ற வலி சற்று அதிகமே உள் வலியானதால், இங்கு ஜனனம் ஆனால் உங்கள் பேரன்பு மரணம் ஆவதனால் இறுதியில் இதயங்கள் உடைந்து அக்னியோடு முடிவாகி போனதேனோ?
விண்ணில் நட்சத்திரமாய் மின்னும் பிரிந்த உயிர் என்று பிறர் சொல்லி கேட்டதுண்டு உங்களை இனி எந்த விண்மீனாய் நாம் என்று காண்போமோ? புகுலகம் இருந்து, படைத்தவர் விளையாட்டில் யாருக்கும் விடையில்லை? விழியோரம் சொறியும் விலையில்லா விழிநீரில், நாள் தோறும் நாம் நனைவோம் நாம் காணும் விண்ணுலகம் காணும் வரை!!