Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 AUG 1952
இறப்பு 09 APR 2023
அமரர் கௌரி கேதீஸ்வரநாதன்
ஓய்வுநிலை அதிபர் - யா/அனலைதீவு வடலுார் அ. த. க வித்தியாலயம்
வயது 70
அமரர் கௌரி கேதீஸ்வரநாதன் 1952 - 2023 அனலைதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். அனலைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நிரந்தர வாழ்விடமாகவும், கனடா Mississauga வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட  கௌரி கேதீஸ்வரநாதன் அவர்கள் 09-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று அனலைதீவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கேதீஸ்வரநாதன்(ஜேர்மனி) அவர்களின் அன்பு மனைவியும்,

பிரபாகரன்(கனடா ) அவர்களின் பாசமிகு தாயாரும்,

சகிதா அவர்களின் அன்பு மாமியாரும்,

ஸ்ரீனிகா, ஹரினிஸா, அஸ்மிதா ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,

கௌசலா அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற வைத்தீஸ்வரமூர்த்தி, இராஜேஸ்வரன், காலஞ்சென்ற நாகேஸ்வரன், சுந்தரேஸ்வரி வெற்றிவேல், காலஞ்சென்ற ஞானேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

உதயகுமாரன் இலக்கினேஸ்வரி தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக அனலைதீவு 2ம் வட்டாரத்தில் அமைந்துள்ள அவரது  இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 12-04-2023 புதன்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து ந.ப 12:00 மணியளவில் அனலைதீவு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: Family

தொடர்புகளுக்கு

பிரபாகரன் - மகன்
கேதீஸ்வரநாதன் - கணவர்
கௌசலா - சகோதரி
Dr. காயத்திரி - பெறாமகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices