இன்று எமது கனவுகளுக்கு இந்த மனச்சாட்சியே இல்லாத உலகமும், சிங்கள பவுத்த பேரினவாதமும் மற்றும் கயவர்கள், துரோகிகள் சேர்ந்து கொள்ளியிடப்பட்டு , எமது கனவுகளுக்கு ... விரோதிகளாலும் துரோகிகளாலும் நம்பவைத்து கழுத்து அறுக்கப்பட்டு காடாத்தும் செய்யப்பட்ட நாளாகும். இந்ததுயர்நிறைந்த நாள் ஈழத்தமிழினத்துக்கு மிகவும் வேதனையும் ,வலிகளையும் தந்த நாளாகும் .தமிழினம் சோர்ந்து போகாது!,வீழ்ந்து விடாது!! நீதி என்பது இயற்கையின் கையில் (இறைவனின் ) இதுவே எமது நம்பிக்கையுமாகும் . இன்றைய இந்தத்துயர நாளில் எமது மண்ணுக்காக தமிழீழ விடுதலை என்ற அந்த மகத்தான விடியலுக்காய். அந்த மகத்தான ஒரே நோக்கிற்காய் , தமது உன்னதமான உயரிய விலைமதிக்கமுடியாத உயிர்களை தியாகம் செய்து வீழ்ந்து மடிந்து வித்தாகி, எம்முள்ளங்களில் எல்லாம் என்றும், இன்றும், எனியும், இனி எப்பவும் வாழும் ,வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த உயரிய மாவீரங்களுக்கும் ,அவர்களுடன் சேர்த்து சிங்கள பாசிச பவுத்த இனவாதத்தாலும் துரோககும்பல்களாலும் கொடூரமாக கிழித்து குதறப்பட்டு இனப்படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளையும் கனத்த வலிநிறைந்த இதயத்துடன் நினைவுகூர்ந்து இதயக்கண்ணீர் அஞ்சலிகள் . இன்றைய நாளில் தமிழர்கள் நாம் ஒன்றுபட்டு ஈழத்தமிழர்களாக இணைந்து நிற்பதே இந்த உயரிய ஆத்மாக்களுக்கு நாம் செய்யும் மகத்தான உயரிய அஞ்சலியாகும்.