

தமிழினப் படுகொலையின் நினைவு நாள்
2009
முள்ளிவாய்க்கால், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இந்தநாள் கறுப்புநாள்
ஈழதேசம்
குருதியில் நனைந்த சிவப்புநாள்
மரணஓலம் காதுகிழிக்க
மனிதசடலம் சிதறிகிடக்க
சதைகளின் சகதிகளில்
சர்வாதிகாரப்பேய்கள்
பிணம்தின்று பெருமைகொண்டநாள்
தன்னை இழந்த தமிழினம்
வரலாறாகிப்போனநாள்
வழியும்கண்ணீரோடு
முள்ளிவாய்க்கால் முடிவல்லத்
தொடக்கம் தொடக்கமென்றே
நீதிக்கதவுகளின் நெஞ்சத்தைத்தட்ட
தமிழர்தம் கரத்தை உயர்த்தியநாள்
உலகம் அறியாமல்
உறங்கிக்கிடந்த இனம்
விழித் திறன்தெழுந்து
விரிகின்ற திசையெங்கும்
நீதிகேட்டு நிமிர்ந்தநாள்
இலட்சக்கணக்கான ஆத்மாக்களை
நினைத்துப்பார்க்க மட்டுமல்ல
நீதியைமீட்காமல் நித்திரை இல்லையென
ஒவ்வொருத் தமிழனும்
உறுதியேற்கும் நாளே இந்நாள்.
Write Tribute