1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
12
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மல்லாகம் நீதிமன்ற வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதி இரத்தினம் அவர்கள் 04-06-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
முத்தே ரத்தினமே
குடும்ப ஒளி விளக்கே
பாசத்தின் உறைவிடமே
நீங்கள் எம்மை விட்டுப் போய்
ஓராண்டு ஆனதுவே!
இதயத்தின் குமுறல் எல்லாம் இரவோடு கரைகிறது
சந்தனப் பேழையோடு சாம்பலாய் போகையிலே
கருகியது நாங்கள் அய்யா
இவ்வுலகம் விட்டு நீங்கள்
எங்குதான் போனீரோ- தவிக்கின்றோம் நாம் இங்கு
மலர்களாய் உமைத்தூவி விழிநீரால் தாலாட்டி
நகர்கிறது நாட்கள் இன்று
இறப்பு அனைவருக்கும் நியதி என்றாலும்
உங்களை மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது
மறுபடியும் காணத்துடிக்கிறது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்