யாழ். அச்சுவேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி வடக்கு, கனடா Whitby ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானலட்சுமி விஸ்வரட்ணம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அம்மா!
புன்னகை தவழும் உன்முகம் மறைந்து
மாதம் ஒன்று ஆனதம்மா
உங்கள் அன்பை தோற்கடிக்க
மற்றொரு அன்பை உலகில் யாரும்
எமக்கு தரப்போவதில்லை அம்மா!
தொலைத்துவிட்டோம் என்று
நாம் எண்ணவில்லை.....
காணவில்லை என்றெண்ணிக்
கலங்குகின்றோம்...
எம்முள்ளே நீங்கள் என்றும்
எம்மை வாழவைப்பீர்கள் நாமறிவோம்
ஆனாலும்
அம்மா என்றழைத்தவுடன்
கேட்பதற்கு யாருமில்லை....
உங்கள் முன் என்றும் குழந்தைகளாய்
நாம் வலம் வந்தோம் இனி என் செய்வோம்???
தூரதேசம் இருந்தாலும்
தேடுவதற்கு ஒர் தாயுண்டு
என்று மகிழ்ந்திருந்தோம்
இனி யாரும் இல்லையம்மா...
உங்களைப் போல் அன்பாக அழைப்பதற்கு...
உங்கள் அன்பிற்காக ஏங்கித் தவிக்கும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
எங்கள் அன்பு தெய்வத்தாய் ஆண்டவர் அடிசேர்ந்த செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்து ஆறுதல் கூறியவர்களுக்கும், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருந்து தொலைபேசி, மின்னஞ்சல் சமூக வலைத்தளங்கல், முகநூல் ஆகியவை மூலமாகவும் எமக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட வேளையில் போதும், ஈமைக்கிரியைகளின் போதும் மலர்வளையங்கள் வைத்து அஞ்சலி செலித்தியவர்களுக்கும், எமக்கு சகல வழிகளிலும் உதவிகள் செய்து ஆறுதல் சொன்ன அன்பு உள்ளங்களுக்கும் உற்றார், உறவினார், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.