Clicky

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
பிறப்பு 19 OCT 1951
இறப்பு 30 MAR 2023
அமரர் ஏரம்பு விஜயரத்தினம் 1951 - 2023 நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா, செட்டிக்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஏரம்பு விஜயரத்தினம் அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் அந்தியேட்டிக்கிரியை 27-04-2023 வியாழக்கிழமை அன்று காலை 06:00 மணியளவில் இராமேஸ்வரம் புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக் கிருத்தியம் 29-04-2023 சனிக்கிழமை அன்று பகல் 12:00 மணியளவில் அவரது இல்லத்திலும் நடைபெறும். அத் தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:-
இல:143, 9ம் ஒழுங்கை,
2ம் பண்ணை,
செட்டிகுளம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்