2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஏரம்பு விஜயரத்தினம்
(நல்லையா)
வயது 71

அமரர் ஏரம்பு விஜயரத்தினம்
1951 -
2023
நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
திதி:06/04/2025
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா, செட்டிக்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஏரம்பு விஜயரத்தினம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இரண்டு ஆன போதிலும் நீங்களின்றிய
துயரங்கள் இன்னும் ஆறவில்லை அப்பா!!
அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அப்பா!!
இரண்டு வருடங்கள் உருண்ட போதிலும்
உங்களின் நினைவுகள் மனதில் ஓயாத அலைகளாய்
ஒவ்வொரு நாளும் ஏதோ ஓரிடத்தில் உங்களின் ஞாபகம்
அப்பா மீண்டும் வரமாட்டாரா என ஏங்குவோம் நாங்கள்!
உங்களின் மீதான எங்களின் தேடல்கள்
எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை ஓயாது!!!
எங்கள் தெய்வத்தின் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
https://www.youtube.com/live/NOrb-9YjG2c?feature=share