3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் எலிசபெத் பாக்கியநாதர்
1944 -
2021
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
19
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த எலிசபெத் பாக்கியநாதர் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
மூன்று ஆண்டுகள் உருண்டோடினாலும்
உங்களை மறவாது தவிக்கின்றோம் அம்மா
அன்புடனும் பாசத்துடனும் வளர்த்தெடுத்து
பிள்ளைகளின் நினைவாக வாழ்ந்து..
வாழ்விலும் தாழ்விலும் துணை நின்ற
என் அருமைத் தாயே
வாழ்வு மாயமென்று எமக்கு
உணர்த்தி விட்டுச் சென்றாயோ அம்மா
நீண்டு செல்லும் நாட்களிலே
நிழல் வடிவில் தெரிகின்றீர்கள்
ஆண்டுகள் பல சென்றாலும் - அகலாது
உங்களின் நினைவுகள் எம்மை விட்டு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்