

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Coventry ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ஈஸ்வரி தில்லைநாதன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் வீட்டு குல விளக்கே
அம்மா எமை விட்டு பிரிந்தது ஏனோ
அன்பின் நிறைவிடமே அம்மா
பாசத்தோடும் சிரித்த முகத்தோடும்
கண்ணின் இமை போல் எமை காத்து
துன்பம் துயரம் தெரியாது எமை வளர்த்து
தரணியிலே எமை உயர வைத்து
இன்பமுடன் நாம் வாழ வழிகாட்டி
எமை எல்லாம் ஆழாத்துயரில் ஆழ்த்தி
விட்டு சென்று ஆனதம்மா ஓராண்டு
ஓராண்டு காலமதில் உமைப் பிரிந்து
ஒரு நொடிப்பொழுதும் உமை
மறவாமல் நாம் வாழ்கின்றோம்
எத்தனை ஆயிரம் உறவுகள்
எமை அணைத்திட இருந்தாலும்
அத்தனையும் எம் அம்மாவுக்கு நிகராகுமா?
ஆண்டுகள் பல ஆனாலும்
ஆறாது எம் துயரம் நீங்காது
அம்மா எம் மனதில் உன் நினைவு
இன்னொரு பிறப்பு ஒன்று உண்டெனில்
உன் பிள்ளைகளாக மட்டுமே
நாம் பிறந்திட வேண்டும் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டிநிற்கின்றோம்.
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்..!
Our deepest sympathies to your family.