யாழ். தென்மராட்சி உசன் கந்தசுவாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை சின்னத்துரை அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் 31 ஆம் நாள் அந்தியேட்டிக் கிரியைகள் 14-08-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தகரையிலும், வீட்டுக்கிருத்திய கிரியை 16-08-2023 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலும் நடைபெற இருப்பதனால் இப் பிரார்த்தனை நிகழ்வில் தாங்கள் கலந்துகொள்வதோடு தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் இணைந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
உசன் கந்தசாமி கோயிலடி,
மிருசுவில்.