7ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செந்தூரி சந்திரகுமார்
குயின்மேரி பல்கலைக்கழக மருத்துவபீட இறுதி ஆண்டு மாணவி
வயது 24

அமரர் செந்தூரி சந்திரகுமார்
1990 -
2015
South Harrow, United Kingdom
United Kingdom
Tribute
11
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
லண்டன் South Harrow வைப் பிறப்பிடமாகவும், Wood stock Oxford ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செந்தூரி சந்திரகுமார் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கும் நீ நிறைந்தே கண்மணி
எமை விட்டு ஏன் நீங்கினாய் கண்ணே நீ?
பொங்கும் விழி நீர் துடைக்கும் - உன்
பூவிரல்கள் எங்கே கண்மணி?
வண்ணங்கள் பல காட்டி
வழிநெடுகச் சிரிப்பூட்டி - இன்று
விழி சொரிய விட்டுவிண்ணேறிச்
சென்றதேனோ?
இன்னும் தான்
ஏற்கமுடியவில்லை–நீ
இல்லை என்பதை
வலியைத் தாங்கி விட
இதயத்திற்கு முடியவில்லை
வலிந்து ஏற்றுவிட
மனதில் துணிவுமில்லை
மொத்தமாக உன்னை
வாரிக் கொடுத்துவிட்டு
விழியோரம் எந் நாளும்
கண்ணீர் சுமக்கின்றோம்!
காலங்கள் பல மாறும் - எம்
கோலங்கள் தடுமாறும் - உன்
பாலமுகம் மட்டும் என்றும்
காலமின்றி எம்முடன் வாழும்
என்றும் உம் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்