Clicky

நினைவஞ்சலி
பிறப்பு 04 MAY 1928
இறப்பு 14 SEP 2020
அமரர் செல்வத்துரை பஞ்சாட்சரம் (பஞ்சாட்சர அக்கா)
பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் உயர்தரப்பாடசாலை மாணவியும், ஆசிரியையும்
வயது 92
அமரர் செல்வத்துரை பஞ்சாட்சரம் 1928 - 2020  துன்னாலை தெற்கு, Sri Lanka Sri Lanka
நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி துன்னாலை தெற்கு கொற்றை உடையார் பகுதியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, மட்டக்களப்பு, காலி, மன்னார், கொழும்பு ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட செல்வத்துரை பஞ்சாட்சரம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தில் மாணப் பெரிது

பத்துமாதம் எம்மைச் சுமந்து
பாரினிலே பெற்றெடுத்து
பகல் இரவாய்க் கண்விழித்து
பணிகள் பல புரிந்து

தான் பெற்ற கல்வியைச் சொரிந்து
அகல் விளக்காய் பாரினில் மிளிரவைத்து
அத்திவாரமாக இருந்து- எம்மை
அகிலத்தில் உயர வைத்து

மனிதம் நிறைந்த மக்களாக
இவ்வுலகில் சிறக்க வைத்து
மற்றோர் மதிக்கும் வண்ணம்
மாண்புறு பதவிகளில் திகழவைத்து

மடிந்தனையோ அம்மா நீ
மாதம் ஒன்று ஆனாலும்
மறக்க முடியவில்லையே
மனம் கலங்கி நிற்கின்றோம்

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!  

எங்களை துயரத்தில் ஆழ்த்தி மீளாத்துயில் கொண்ட எங்கள் தாயின் பிரிவுச் செய்திகேட்டு நேரில் வந்தும், தொலைபேசிவாயிலாகவும், குறுந்தகவல், சமூகவலைத்தளங்கள் ஊடாக எமக்கு ஆறுதல் கூறியவர்களிற்கும், மலர் வளையம், மலர் மாலை, மலர்கள், வீட்டு உட்புகுவாசலில் வாழை, தென்னோலையில் தோரணம் கட்டியவர்களிற்கும், தேவாரம் படித்த, விடியக்காலையில் இழவுசொல்வதில் ஈடுபட்ட, கண்ணீர் அஞ்சலிப் பிரசுரங்களை வெளியிட்ட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் உயர்தரப்பாடசாலையின் வெளிநாட்டு பழைய மாணவர் சங்கத்தினர்க்கும், பேராதனை வளாக பழைய மாணவர்கள், விரிவுரையாளர்கள், விவசாய பாடசாலை, தொழில்நுட்ப கல்லூரி பழையமாணவர்கள், தற்போதைய விரிவுரையாளர்கள், அதிகாரிகள், சகல தேசிய சேமிப்பு வங்கி கிளை முகாமையாளர்கள், அலுவலர்கள், அதிகாரிகளுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், Covid 19 என்றும் பாராமல் சகல உதவிகளையும் செய்து கொண்டிருக்கும் உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் 14-10-2020 மு.ப 06:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெற்ற பின்னர் சபிண்டிகரண கிரியைகள் ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் Covid 19 சட்டதிட்டத்திற்கு அமைவாக ஆத்மசாந்தி பிரார்த்தனையும், மதியபோசனமும் இடம்பெறும் என்பதனை அறியத்தருக்கின்றோம்.   

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 17 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.