யாழ். சண்டிலிப்பாய் மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Vaughan ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் செல்லப்பா அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அங்கிள் அன்ரி மறைந்து அந்த துயரத்தில் இருந்து மீண்டு வர முதல் நீங்கள் உங்களின் துணையைத்தேடி சென்றுவிட்டீர்கள்,இணைபிரியாத தம்பதிகள் நீங்கள் என்று நிரூபித்துக்காட்டி விட்டீகள்...